
தற்போது போடப்படும் ஆஸ்திரேலிய பிட்ச்கள் கணிக்க முடியாததாகி வருகிறது. மேலும், இங்கிலாந்து பவுலர்கள் ஸ்விங் செய்வதற்கு ஏற்ப அமையாது. இங்கு வேகமும் பவுன்ஸும் இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று ஆஸ்திரேலிய அணியின் ஆஷஸ் முதல் டெஸ்ட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
பெர்த்தில் வரும் 21-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது, ஆப்டஸ் ஸ்டேடியத்தின் பிட்ச் நிச்சயம் பவுலிங்கிற்கு, குறிப்பாக வேகப்பந்து வீச்சுக்கு அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய ரக கூகபரா ‘சீம் அப்’ பந்து வீச்சுக்குச் சாதகமாகவே இருக்கும் என்று ஸ்டீவ் ஸ்மித் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

