மும்பை: இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் இந்திய வீரர்கள் முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததும், இந்திய கிரிக்கெட் அணியினர், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளனர்.