லண்டன்: ஆண்டர்சன் டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் இந்திய பவுலர் சிராஜ். இந்த தொடரில் மொத்தம் 23 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். 1,113 பந்துகளை இந்தத் தொடரில் வீசியுள்ளார். அது அவரது அசாத்திய உடல் உழைப்புக்கும், கிரிக்கெட் மீதான ஆர்வத்துக்கும் சான்றாகும்.
கிரிக்கெட் உலகில் இப்போது சிராஜ் குறித்த டாக் வைரலாக உள்ளது. அதிலும் இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் ஓவலில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் ‘இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை’ என்ற நிலையிலும் அவர் மல்லுக்கட்டிய விதம் அற்புதம். அதுதான் பலரையும் ஈர்த்துள்ளது.