நாக்பூர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாக்பூரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர்களான பில் சால்ட், பென் டக்கெட் சிறந்த அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ஹர்ஷித் ராணா வீசிய 6-வது ஓவரில் பில் சால்ட் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் விளாசி மிரட்டினார். தொடர்ந்து அக்சர் படேல் வீசிய 8-வது ஓவரில் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் சேர்க்கப்பட்டது.