சென்னை: இசிஆர் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது அதிமுகவினர் தான் என தெரிவித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காரில் திமுக கொடியை கட்டிக் கொண்டு திட்டமிட்டு சதியில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்தில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் எந்த ஒரு குற்றச் சம்பவம் நடைபெற்றாலும் அதை திமுகவோடு தொடர்பு படுத்த வேண்டும் என்ற தீய உள் நோக்கத்தோடு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தொடர்ந்து முயன்று வருகிறார். இசிஆர் சாலையில் பெண்கள் பயணித்த காரை சிலர் வழி மறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு அதிமுகவை சார்ந்தவர்.