செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டாப் 2 வீரர்களான பாபர் அசம், முகமது ரிஸ்வான் தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும் இந்த பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணியை வீழ்த்தும் திறமை உள்ளது என்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய தலைமைத் தேர்வாளருமான ஆகிப் ஜாவேத்.
செப்டம்பர் 14-ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறுகிறது. முன்பு போல் இந்திய – பாகிஸ்தான் போட்டிகளில் த்ரில் இல்லையென்றாலும் ‘ஹைப்’ மட்டும் வழக்கம்போல் உச்சம் பெறுகிறது.