புதுடெல்லி: இன்றைய ஏஐ சூழ் டிஜிட்டல் உலகத்தில் மென்பொருள் பொறியாளர்களுக்கு இந்தவொரு திறன் மிகவும் அவசியம் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா கூறியுள்ளார். டெக் உலகில் அடியெடுத்து வைக்கும் இளம் பொறியாளர்களுக்கு அறிவுரையும் அவர் வழங்கியுள்ளார்.
“மென்பொருள் குறித்த அடிப்படைகளை மென்பொருள் பொறியாளர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். அது மிகவும் முக்கியமானது. ஏஐ நுட்பத்தின் வரவு எண்ணற்ற மென்பொருள் வடிவமைப்பாளர்களை உருவாக்க வழி செய்துள்ளது.