அரசியல் நிர்ணய சபையில் காங்கிரஸ் மகாசபைக்கும், முஸ்லிம் லீக்கிற்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இரு கட்சிகளும் எந்த விஷயம் குறித்தும் ஒத்துப்போகவில்லை. இதனால், இந்தியாவின் பல பகுதிகளில் வகுப்புவாத வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன.
“ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்க மிகவும் பொருத்தமான அரசு அல்லது அரசுகளை நாங்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை எங்களுக்கு ஏற்படும். இப்போதைய மாகாண அரசுகளையோ அல்லது இந்தியாவின் ஒருசில பகுதிகளுக்கான ஒருவகைக் கூட்டு அரசுகளையோ நாங்கள் இதற்காகத் தேர்ந்தெடுக்கக் கூடும்” என்று பிரிட்டிஷ் அரசின் நிலையை சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் அறிவித்தார்.