
பெங்களூரு: பங்குத் தரகு நிறுவனமான ‘ஜெரோதா' சிஇஓ நிதின் காமத் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது.
இந்திய குடும்பங்களிடம் சுமார் 3 லட்சம் கோடி டாலர் (உலக தங்க கவுன்சில் மதிப்பீடு) மதிப்பிலான தங்கம் உள்ளது. அவை பயன்பாடு இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன. இதற்கிடையே, பங்கு முதலீடுகள், வளர்ச்சிக்கு மூலதனம் தேவைப்படும் நிறுவனங்களுக்கு நிதி வழங்குகின்றன. எனவே, தங்க கடன்களைத் தாண்டி, இந்த தங்கத்தை பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்கான சிறந்த வழிகள் தேவைப்படுகின்றன” என கூறியுள்ளார்.

