புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவருக்கு முன் நான்கு வருடங்கள் அப்பொறுப்பில் இருந்த ராஜீவ் குமார் 24-க்கும் மேற்பட்ட தேர்தல்களை நடத்தியுள்ளார். இதில், குடியரசுத் தலைவர் மற்றும் பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்களும் அடங்கும். அவரது பதவிக் காலம் பிப்ரவரி 18-ம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையாராக ஞானேஷ் குமாரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.