புதுடெல்லி: நமது நாட்டுக்கு பாரதம் என்பது பெயர் எனும்போது அதனை அப்படி மட்டுமே அழைக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய தத்தாத்ரேய ஹொசபலே, "நமது நாட்டின் பெயர் பாரதம் எனும்போது, அந்த பெயரைக் கொண்டே நமது நாடு அழைக்கப்பட வேண்டும். சமீபத்தில் குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டின் இரவு விருந்துக்கான அரசு அழைப்பிதழில் பாரத குடியரசு தலைவர் (President of Bharat) என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆங்கிலத்திலும் அப்படியே குறிப்பிடப்பட்டிருந்தது.