கோவை: இந்தியா – இங்கிலாந்து இடையே மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அது குறித்து தொழில் அமைப்பினர் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா கூறும்போது, “இந்தியா – இங்கிலாந்து வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் தமிழகத்துக்கு அதிக சதகமாக அமைந்துள்ளது. ஜவுளி, தொழில்நுட்ப ஜவுளி, கடல் சார்ந்த உணவு வகைகள் ஏற்றுமதி, காலணிகள், நகைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் பயன்தரும்.