புதுடெல்லி: இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், நாமும் பதிலடியாக அவர்களின் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் சசி தரூர் மேலும் கூறியது: “இந்தியாவுடனான உறவை மதிக்கவில்லையா என்பதை அமெரிக்காவிடம் நாம் கேட்க வேண்டும். அவர்களுக்கு இந்தியா முக்கியமில்லை என்றால் நமக்கும் அமெரிக்கா முக்கியமில்லை. தற்போதைய நிலையில் இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீத வரியை அறிவித்துள்ள நிலையில் அமெரிக்க பொருட்களின் இறக்குமதி மீது இந்தியா சராசரியாக 17 சதவீதம் மட்டுமே வரி விதிக்கிறது.