வாஷிங்டன்: “இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 2 தலைவர்கள்தான், இரு நாடுகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலை நிறுத்தினார்கள்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல்முறையாகக் கூறி இருக்கிறார்.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தார்கள். இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடங்கியது.