புதுடெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில், பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் இன்று பிரதமர் நரேந்திர மோடி தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
எண்.7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்தும், எல்லையில் நடைபெற்று வரும் முன்னேற்றங்கள் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.