மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் இந்தாண்டு இந்தியா வருகிறார் என மாஸ்கோவில் அளித்த பேட்டியில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார். இந்தியா – ரஷ்யா இடையே ராணுவ உறவுகளை விரிவாக்கும் நோக்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா சென்றுள்ளார்.
அவர் அதிபர் புதினை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் அவர் இன்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,” ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தாண்டு இந்தியா வருகிறார் ” என கூறினார்.