மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் டெஸ்லாவின் முதல் விற்பனை ஷோரூமை திறந்து வைத்தார். அவர், “டெஸ்லா சரியான மாநிலத்துக்கும், சரியான நகரத்துக்கும் வந்துவிட்டது” என்று தெரிவித்தார்.
மும்பையில் முதல் டெஸ்லா ஷோரூமை திறந்துவைத்து பேசிய தேவேந்திர பட்னாவிஸ், "டெஸ்லாவை மும்பைக்கு வரவேற்கிறேன். டெஸ்லா இங்கு தனது முதல் ஷோரூமை திறந்துள்ளது. டெஸ்லா சரியான நகரத்துக்கும், சரியான மாநிலத்துக்கும் வந்துவிட்டது. டெஸ்லா இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் தொடங்கியுள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. டெஸ்லா இங்கு உதிரிபாகங்கள் மற்றும் சேவை மையத்தையும் நிறுவ உள்ளது. மேலும், நான்கு பெரிய சார்ஜிங் நிலையங்களையும் அமைக்கவுள்ளனர்.