
புதுடெல்லி: இந்தியாவில் முதலீடு செய்யவும், புதுமைகளை உருவாக்கவும் இதுவே சரியான நேரம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள யசோ பூமியில் இந்திய மொபைல் மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
மேக் இன் இந்தியா திட்டத்தில் மொபைல் போன்கள், செமிகண்டக்டர், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட் பல்வேறு துறைகளில் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தங்களின் வேகத்தை அரசு துரிதப்படுத்தி வருகிறது.

