போர்ட் லூயிஸ்: இரண்டு நாள் பயணமாக மொரீஷியஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வசித்து வரும் இந்திய மக்கள் மத்தியில் செவ்வாய்க்கிழமை அன்று உரையாடினார்.
“இந்தியா எப்போதும் மொரீஷியஸ் உடன் நிற்கிறது. கடந்த 2021-ல் இந்தியாவின் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் (CEPA) கையெழுத்திட்ட முதல் ஆப்பிரிக்க ஒன்றிய நாடக மொரீஷியஸ் உள்ளது. பல்வேறு இந்திய நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்துள்ளன. இந்தியப் பெருங்கடல் பகுதியைப் பாதுகாக்க மொரீஷியஸ் உடன் இந்தியா இணைந்து செயல்படுகிறது.