சென்னை: வங்கி சாரா நிதி நிறுவனமான இன்டெல் மணி கடந்த 2025-ம் நிதியாண்டில் கடன் வழங்கலில் 69 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
இதுகுறித்து இன்டெல் மணி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியுமான உமேஷ் மோகன் கூறியதாவது: போட்டி நிறைந்த சூழலில் இன்டெல் மணி கடந்த நிதியாண்டில் கடன் வழங்கலில் 69 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. அதேபோன்று சொத்து பராமரிப்பில் 52 சதவீதம் வளர்ச்சியை சாத்தியமாக்கி ரூ.2,400 கோடியை நிர்வகிக்கும் அளவுக்கு நிறுவனம் வளர்ந்துள்ளது.