புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் வழிகாட்டுதலில் கடந்த 12 ஆண்டுகளாக இயக்கி வருகிறது ‘மறுபக்கம்’ எனும் மாற்றுத் திரைப்படக்குழு. இக்குழுவினர் ஒருங்கிணைத்துள்ள 13வது சென்னை பன்னாட்டு ஆவணப்பட & குறும்படவிழா சென்னையில் இன்று மாலை தொடங்கியது. இவ்விழா பிப்ரவரி 21 முதல் 28 வரை 8 நாள்கள் நடக்கிறது.
சென்னையின் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் பண்பாட்டு அமைப்புகளுடன் இணைந்து ‘மறுப்பக்கம்’ நடத்தும் இந்த விழாவில் 80 புதிய, விருதுகள் பெற்ற, அதிக கவனம் பெற்ற இந்திய, பன்னாட்டு ஆவணப்படங்கள், குறும்படங்கள், பரிசோதனைப்படங்கள், அனிமேஷன் படங்கள், கைபேசிப் படங்கள் திரையிடல் காண்கின்றன. இந்தியாவின் பல பகுதியிலிருந்து 20க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் நேரில் கலந்து கொண்டு, தங்களது படைப்புக்களைத் திரையிடுவதோடு, கலந்துரையாடல்களிலும் பங்கேற்கவிருக்கின்றனர்.