கோபன்ஹேகன்: இரட்டை முகம் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது. நாம் அதில் எந்த முகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானின் நடவடிக்கை தொடர்பாக சர்வதேச அளவில் எடுத்துரைக்கும் நோக்கில் மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட 7 குழுக்களில், பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர், டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் பேசும்போது, “இந்தியா ஏன் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்று நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள் கூட அடிக்கடி கேட்கிறார்கள்.