ஜம்மு விமான நிலையம் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்த ட்ரோன்களை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.
ஜம்மு எல்லைப் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று இரவு 8 மணி அளவில் ஜம்மு விமான நிலையம் மீது பாகிஸ்தான் ராணுவ ட்ரோன்கள் திடீர் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இந்திய விமானப் படை அனைத்து ட்ரோன்களையும் நடுவானில் சுட்டு வீழ்த்தியது. இதன்மூலம் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.