ராமேஸ்வரம்: இலங்கை அரசைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 22ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற 32 மீனவர்களை கைது செய்து, அவர்களது 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. தலைமன்னார் நீதிமன்றம் மார்ச் 7ம் தேதி வரை சிறை காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, மீனவர்கள் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இலங்கை கடற்படையின் சிறைபிடிப்பு நடவடிக்கையை கண்டித்தும், மீனவர்கள், அவர்களது விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 24ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மீனவர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டிரைக்கால் ராமேஸ்வரத்தில் மீன் வரத்தின்றி மதுரை, கோவை, கேரளா மார்க்கெட்டுக்கு மீன்கள் செல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அவற்றின் விலை உயரும் அபாயம் உள்ளது.
The post இலங்கை அரசைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.