சிவகங்கை: இளையான்குடியில் உயிரிழந்த இரு சிறுமிகளின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்தனர். அரசு வேலைக்கு அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆழிமதுரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்தவர் சோபியா (8), அங்கன்வாடி மையத்தில் படித்தவர் கிறிஸ்மிதா (4). நேற்று முன்தினம் பள்ளி, அங்கன்வாடி மையத்துக்குச் சென்ற இருவரும் ஆசிரியர், அங்கன்வாடி ஊழியர் அஜாக்கிரதையால் கண்மாயில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து, உடனடியாக பள்ளி தலைமையாசிரியர் தாய்மேரியை பணி நீக்கம் செய்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஜோதி லெட்சுமி உத்தரவிட்டார்.