செல்ம்ஸ்ஃபோர்டு: இந்திய யு19 கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே 64 பந்துகளில் சதம் கண்டார். இதை இங்கிலாந்து மண்ணில் நான்காவது இன்னிங்ஸில் அவர் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய யு19 கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டின் யு19 அணியுடன் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், 2 டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்தன.