புதுடெல்லி: இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளதையடுத்து ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க ஆபரேஷன் சிந்து நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
அதன் முதல்கட்டமாக 110 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் விமானம் வியாழக்கிழமை காலை டெல்லியை வந்தடைந்தது. ஈரானில் இருந்து திரும்பியவர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.