உத்தர பிரதேசத்தில் பாஜக பிரமுகர் குல்பம் சிங் யாதவை, மர்ம நபர்கள் 3 பேர் விஷ ஊசி போட்டு கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் அலிகர் அருகேயுள்ள தப்தாரா கிராமத்தைச் சேர்ந்தவர் குல்பம் சிங் யாதவ் (60). பாஜக பிரமுகரான இவர் , மேற்கு உத்தர பிரதேசத்தின் பாஜக மண்டல துணைத் தலைவராக இருந்தார். கடந்த 2004-ம் ஆண்டு குன்னார் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் இவர் அப்போதைய சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவை எதிர்த்து போட்டியிட்டவர். பஜக கட்சியில் இவர் பல பதவிகளை வகித்துள்ளார். இவர் தனது தப்தாரா கிராமத்தில் உள்ள தனது தோட்டத்தில் நேற்று முன்தினம் அமர்ந்திருந்தார்.