புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் வாராணசியில் துறவிகளால் கொண்டாப்படும் மயான ஹோலி பிரபலமாகி வருகிறது. மணிகன்கா காட்டில் நடைபெற்ற 2-வது நாள் நிகழ்ச்சியில் அகோரி, நாகா துறவிகளுடன் சுமார் 10,000 பொது மக்களும் இணைந்து ஹோலி கொண்டாடினர்.
வட மாநிலங்களில் மார்ச் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ள ஹோலி பண்டிகை மிகவும் முக்கியமானது. இது ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையாக முன்கூட்டியே துவக்கப்படுகிறது. இந்த வகையில், திங்கள்கிழமை வந்த ரங்பர்னி ஏகாதேசி தினத்தன்று உத்தரப் பிரதேசத்தில் ஹோலி துவங்கியது. இதற்கு அந்த நாளில்தான் இங்குள்ள பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக நம்பிக்கை உள்ளது.