மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் 2 மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022 பிப்ரவரியில் போர் தொடுத்தது. இதற்கு உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இப்போரை நிறுத்த உக்ரைன், ரஷ்யா ஆகிய இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுத்து வருகிறார். என்றாலும் இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.