சென்னை: ‘டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் விதித்திருப்பது இடைக்கால தடைதான். எனவே, அமலாக்கத் துறை விசாரணை இதற்கு மேலும் நடைபெறும்’ என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன கருத்து சொன்னாலும் அதை மதிக்கிறோம். ஆனால் இதை சிலர் அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். அமலாக்கத் துறையை மத்திய அரசு இயக்குகிறது என்று சொல்வதே தவறு.