சென்னை: உச்ச நேர மின் பயன்பாட்டை கணக்கெடுக்க தாழ்வழுத்த பிரிவில் 26 ஆயிரம் டி.ஓ.டி மீட்டர்களை பொருத்த மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டில் மத்திய மின்சார ஆணையம் பீக் ஹவர் எனப்படும் உச்ச நேரங் களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க மின்சார நுகர்வோர் விதிகளில் மாற்றம் கொண்டு வந்தது. இந்த மாற்றப்பட்ட விதி களை கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்த உத்தரவிட்டது.