சமீபகாலமாக தமிழகத்தில் நடந்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆரோக்கியமான விவாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல்தடுப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதற்கான பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய, மாநில அரசுகள் சார்பில் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. டி.ஜி.பி. தரப்பில் ஆஜரான மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ‘‘உயர் நீதிமன்ற உத்தரவின்படி பணியிடங்களில் நடைபெற்ற பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகளில் விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். பாலியல் தொல்லை தொடர்பாக இப்போது பெண்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.