மதுரையைச் சேர்ந்த மூதாட்டி முத்துப்பிள்ளை கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் ‘உயிரோடு இருக்கும் தன்னை இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டு, சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் வாரிசுச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

