திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தில் பரவலாக சம்பா நடவு செய்து 15 நாட்களான நிலையில், அடி உரமிட வேண்டியிருப்பதால், தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிலையங்களில் யூரியா தட்டுப்பாடு நிலவுகிறது. இதை பயன்படுத்திக் கொண்டு தனியார் உரக் கடைகளில் கூடுதல் விலைக்கு யூரியா விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.