பொள்ளாச்சி: செப்டம்பர் 2 உலக தென்னை தினத்தை முன்னிட்டு, இளநீர் விவசாயிகளுக்காக ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தால் புதிய தென்னை ரகம் ‘ஏஎல்ஆர்-4’ வெளியிடப்பட்டுள்ளது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன தமிழர்களின் ஐவகை நிலத்திணைகள். தென்னையும் தென்னை சார்ந்த தொழில்களும் உள்ள ஆறாம் திணையாக அடையாளம் காணப்படும் மேற்கு மண்டலத்தில் தென்னை அதிகம் விளையும் பகுதியாக பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகள் உள்ளன. தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பல்வேறு சவால்களை சந்தித்துவரும் சூழ்நிலையில், வறட்சி, நோய் தாக்குதல், விலை வீழ்ச்சி என பலமுனை தாக்குதல்களை எதிர்கொள்ளும் தென்னை விவசாயிகளுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம்.