புதுடெல்லி: இந்தியா, பிரேசில், சீனா உட்பட பல நாடுகளுக்கு இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் வர்த்தக மற்றும் வரி கொள்கை குறித்து ஆலோசிக்க பிரிக்ஸ் அமைப்பின் காணொலி கூட்டத்தை பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா கூட்டினார்.
இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். வர்த்தக வரியால் இந்திய உறவில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் முயற்சியில் அமெரிக்க அதிபர் ஈடுபட்டுள்ளார். அதேநேரம் பிரிக்ஸ் அமைப்பின் கூட்டத்தையும் அமெரிக்காவுக்கு எதிரான சதி என்ற சந்தேக கண்ணோட்டத்தோடு அவர் பார்க்கிறார்.