கோவை: புதுமை, தொழில்முனைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகளாவிய திறன் மையமாக கோவை மாறிவருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில், ‘உலகளாவிய திறன் மைய வளர்ச்சிக்கான எல்லை – கோவை 2025’ என்ற தலைப்பில் கோவையில் கருத்தரங்கு நடந்தது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்திரனாக கலந்து கொண்டு பேசும்போது, “உலகளவில் மொத்த பட்டதாரிகளில் 25 சதவீதத்தினர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்.