அரூர்: அரூர் பகுதியில் விலைவீழ்ச்சியால் தர்பூசணி விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் நரிப்பள்ளி, சிக்கலூர், கோட்டப்பட்டி, பையர்நாய்க்கன்பட்டி, புது கொக்கராப்பட்டி, மாலகாபாடி, வாச்சாத்தி, தாதம்பட்டி, புதுப்பட்டி, இருளப்பட்டி, முத்தனுார், கம்பைநல்லூர், மொரப்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அதிக அளவில் தர்பூசணி (பச்சை மற்றும் கிரண்) பழச் செடிகள் பயிரிடப்பட்டுள்ளன.
வழக்கமாக கோடை காலமான ஏப்ரல், மே, ஜுன் மாத சீசனுக்காக 350 ஏக்கருக்கும் அதிகமாக தர்பூசணி பயிரிடப்படும். இதில் போதிய வருவாய் கிடைப்பதால் ஆண்டு முழுவதும் சிலப்பகுதிகளில் பயிரிட்டு வருகின்றனர். அறுவடை செய்யப்படும் தர்பூசணி பழங்கள் சேலம், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும், உள்ளூர் தேவைகளுக்காகவும் அனுப்பப்படுகிறது.