கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது சின்னநற்குணம் கிராமம். இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமம், மெயின் ரோட்டில் இருந்து 3 கி.மீ தூரம் உள்ளடங்கிய கிராமமாகும்.
இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 3 கி.மீ தூரம் நடந்து சென்று எறும்பூர் கிராம பேருந்து நிறுத்தத்தில் நின்று பேருந்து ஏற வேண்டும். நாள்தோறும் இப்படி நடந்தே சென்று, பேருந்து பயணத்தை மேற்கொள்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் சின்னநற்குணம் கிராமத்துக்கு அரசு பேருந்து மற்றும் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன.