சென்னை: எச்சில் இலையில் அங்கப்பிரதட்சனம் செய்ய அனுமதி வழங்கிய உத்தரவுக்கு ஐகோர்ட் தடை விதித்தது. எச்சில் இலையில் அங்கப்பிரதட்சனம் செய்ய தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தார். எச்சில் இலையில் உருளுவது, சுகாதாரத்துக்கும் மனித மாண்புக்கும் உகந்தது அல்ல என ஐகோர்ட் நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனவும் கூறியுள்ளனர்.
The post எச்சில் இலையில் அங்கப்பிரதட்சனம் செய்ய தடை appeared first on Dinakaran.