பெட்ரோல், டீசலில் 20 சதவீதம் அளவுக்கு எத்தனால் கலந்து விற்பனை செய்துவரும் நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக புதுப்பிக்கப்பட்ட எரிபொருளாக எத்தனால் முன்மொழியப்படுவதால், பெட்ரோலுடன் கலந்து விற்பனை செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், சுற்றுச்சூழல் மாசடைதல் கணிசமாக குறையும் என்பது நிபுணர்களின் கருத்தாகும்.
இதுபோன்று எத்தனால் கலந்து வெளிவரும் பெட்ரோல், டீசலை பயன்படுத்தும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு வாகன ஓட்டிகளிடம் இருந்து சமீபகாலமாக ஒருபுலம்பல் வெளிவரத் தொடங்கியுள்ளது. தற்போது விற்பனைசெய்யப்படும் பெட்ரோல், டீசல் முன்பிருந்ததைப் போல் எரிபொருள் திறனுடன் இல்லை, எத்தனால் கலப்பதால் வாகனத்தின் இன்ஜின் மற்றும் உதிரிபாகங்கள் சேதமடைகின்றன என்ற கருத்துகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.