புதுடெல்லி: நாட்டில் சுத்தமான எரிசக்தியை பயன்படுத்த வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, 2025-ம் ஆண்டில் எரிபொருளில் 20% எத்தனால் கலப்பதற்கு இந்தியா பல ஆண்டுகளுக்கு முன்பே இலக்கை நிர்ணயித்தது. இது E20 என அழைக்கப்படுகிறது.
ஆனால் இது வாகன செயல்திறன் மற்றும் நீடித்த உழைப்பில், குறிப்பாக பழைய வாகனங்களில் அதன் தாக்கம் குறித்து ஓட்டுநர்களிடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது.