விருதுநகர்: “எத்தனை படையோடு வந்தாலும், பரிவாரத்தோடு வந்தாலும் நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்” என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறினார்.
விருதுநகரில் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் இன்று (ஏப்.19) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ராஜா ஆகியோர் பங்கேற்று பேசினர்.