புதுடெல்லி: காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வதேரா, அரசியலில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஓர் ஆங்கில ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில், “நான் காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதாலேயே அரசியலுடன் எனக்கு தொடர்பு இருக்கிறது. பல ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போதும், சில கட்சிகள் என் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்தனர்.