‘‘அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிகம் வரி விதித்ததை எடுத்துக் கூறியதால், வரிகளை குறைக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது’’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு இந்தியா 100 சதவீதத்துக்கு மேல் வரி விதித்தது. இதனால் அமெரிக்காவால் தனது தயாரிப்புகளை இந்தியாவில் அதிகம் விற்பனை செய்ய முடியவில்லை. தரமான அமெரிக்க பொருட்களை, இந்தியர்களாலும் நியாயமான விலைக்கு வாங்க முடியாத நிலை இருந்தது. பெரும் பணக்காரர்கள் ஒரு சிலர் மட்டுமே, அதிக வரி செலுத்தி அமெரிக்க பொருட்களை வாங்கினர்.