புதுடெல்லி: “தமிழக அரசை, தமிழக எம்பி.,க்களை, தமிழக மக்களை நாகரிகமற்றவர்கள் என நான் கூறினேன் என்று கனிமொழி கூறினார். நான் அவ்வாறு கூறவில்லை. எனினும், நான் எனது அந்த வார்த்தைகளை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.” என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கியது. மக்களவை கூடிய சிறிது நேரத்தில், தென் சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார்.