புதுடெல்லி: தனது கையெழுத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் நிறைய முயன்றதாகவும், ஆனாலும் தனது கையெழுத்து சிறப்பானதாக மாறவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தேர்வு காலம் நெருங்கி வருவதால் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியின் சுந்தர் நர்சரியில், மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களுக்கு தானே இனிப்புகளை வழங்கிய பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து அவர்களுடன் மிகவும் நெருக்கமான முறையில் உரையாடினார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.