
சென்னை: ‘எம்.பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் குற்றச்சாட்டுப்பதிவை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல’ என சிறப்பு நீதிமன்றங்களை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கண்டித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள எம்.பி,எம்எல்ஏ-க்கள் மீதான வழக்கு விசாரணைகளைக் கண்காணித்து வரும் சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

