‘எம்புரான்’ படத்தின் மீதிருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டுவிட்டது. தற்போது திட்டமிட்டப்படி படம் வெளியாகும் என பிருத்விராஜ் அறிவித்துள்ளார்.
மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட படம் ‘எம்புரான்’. இதனை லைகா நிறுவனம் மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தற்போது லைகா நிறுவனம் மிகவும் கடினமான சூழலில் இருப்பதால், இப்படத்தினை திட்டமிட்டப்படி வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.